Thursday 11 April 2013

கூட்டு பாலியல் வன்கொடுமை:பா.ஜ.க தலைவர் உள்பட 5 பேர் மீது வழக்கு!



தாட்டியா:பா.ஜ.க ஆளும் மத்திய பிரதேச மாநிலம் டாங்க் கரேரா கிராமத்தில் 22 வயதான இளம்பெண்ணை கூட்டுபாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் தாட்டியா நகராட்சி கவுன்சில் பா.ஜ.க உறுப்பினர் பாலகிருஷ்ணா குஷவாஹா உள்ளிட்ட ஐந்து பேர் மீது போலீஸ் வழக்குப் பதிவுச் செய்துள்ளது. ஆனால், இவ்வழக்கில் யாரும் இதுவரை கைதுச் செய்யப்படவில்லை.
கணவரின் சகோதரனுடன் இளம்பெண் ஷேர்ஷா கிராமத்தில் இருந்து திரும்பும் போது கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார். கணவரின் சகோதரனை அடித்து வீழ்த்தியபிறகு இளம்பெண்ணை கயவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு இரையாக்கியுள்ளனர்.
தாட்டியா மாவட்டம் குற்றங்களின் தலைநகராக மாறிவிட்டது என்று மத்தியபிரதேச சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவர் அஜய்சிங் குற்றம் சாட்டியுள்ளார். கடந்த மார்ச் 15-ஆம் தேதி இதே மாவட்டத்தில் சுவிடன் நாட்டைச் சார்ந்த பெண்மணி ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானார்.
பா.ஜ.க தலைவர் ஒருவர் மீது கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கு பதிவுச் செய்யப்பட்டது வெட்க கேடு என்று அஜய்சிங் கூறினார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.