Wednesday 17 April 2013

மூன்றாவது அணி மட்டுமே நாட்டில் முன்னேற்றத்தை கொண்டு வரும்-முலாயம் சிங் !



  • காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு வெளியில் இருந்து ஆதரவு அளித்து வரும் சமாஜ்வாடி கட்சியின் தலைவர் முலாயம் சிங், அக்கூட்டணி ஆட்சி குறித்து தொடர்ந்து விமர்சித்து வருகிறார். 

    இந்நிலையில் லக்னோவில் உள்ள கட்சித் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முலாயம் சிங், மூன்றாவது அணி குறித்து பேசியதாவது:-

    மூன்றாவது அணி டெல்லியில் ஆட்சியில் அமரும்பொழுது மட்டுமே நாட்டு மக்களுக்கு நலன் கிட்டும். காங்கிரசோ அல்லது பாரதீய ஜனதாவோ ஆட்சி அமைக்காது. அதற்கு பதில் மூன்றாவது அணி ஆட்சி அமைக்கும். இனி அந்த இரு கட்சிகளும் பெரும்பான்மையை பெறப்போவதில்லை.

    டெல்லி, குற்றச்செயல்கள் அரங்கேறும் மையமாக விளங்குகிறது. ஆனால், அவர்கள் உத்திரப்பிரதேசத்திற்கு அவப்பெயரை ஏற்படுத்தி வருகின்றனர்.

    இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.