Tuesday 16 April 2013

சம்ஜோதா எக்ஸ்பிரஸ்:பழைய இரும்பு வியாபாரிகளை குறித்து என்.ஐ.ஏ விசாரணை!




புதுடெல்லி:சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட இந்தியாவில் நடந்த பல்வேறு குண்டுவெடிப்புகளை விசாரித்து வரும் என்.ஐ.ஏ, நான்கு பழைய இரும்புவியாபாரிகளை குறித்த விசாரணையை உறுதிச் செய்துள்ளது.
மத்தியபிரதேச மாநிலம் மோ, பிதாம்பூர், ஜூனி ஆகிய இடங்களில் உள்ள பழைய இரும்பு வியாபாரிகளிடமிருந்து வாங்கிய ராணுவ செல்களை பல்வேறு குண்டுவெடிப்புகளில்ஹிந்துத்துவ தீவிரவாதிகள் பயனபடுத்தியிருப்பதை என்.ஐ.ஏ கண்டறிந்துள்ளது. இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷியை கொலைச் செய்த வழக்கில் குற்றவாளியான பல்பீர் சிங்கை 90 நாட்கள் காவலில் விட்டுத்தருமாறு என்.ஐ.ஏ போபால் சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.